இண்டிகோ விமான சேவை எட்டாவது நாளாக பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில்
41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே எவ்வளவு பெரிய விமான நிறுவனமாக இருந்தாலும், பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதிக்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.