தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபி-யை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.....
மேற்கு மண்டல ஐ.ஜி., மதுரை மற்றும் தாம்பரம் காவல் ஆணையர்களும் மாற்றப்பட்டுள்ளனர்...
தமிழகத்தில் 4 நாட்களில் 1,359 வேட்புமனுக்கள் தாக்கல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை ஆயிரத்து 359 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.....
இன்று பொது விடுமுறை என்பதால், நாளை மற்றும் திங்கட்கிழமை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வரும் 9 முதல் 29ம் தேதி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நடத்தவும், வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது...
குவாரி முறைகேடு வழக்கு - பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்...