நாடாளுமன்ற தேர்தல் 2024

"மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நம்மால் தங்கத்தை வாங்க முடியாது"திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்

தந்தி டிவி

"மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நம்மால் தங்கத்தை வாங்க முடியாது"

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம்

#electioncampaign #bjp #dmk #thanthitv

வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். வெலதிகாமணிபெண்டா, மதனாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்த அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, பிரதமர் மோடிக்கு வாக்களித்தால் சமையல் கியாஸ் விலை 2000 ரூபாயாக உயர்ந்து விடும் என்று கூறினார். தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு உயர்ந்து விடும் என்றும், தங்கத்தை நம்மால் வாங்க முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், திமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் சமையல் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு கிடைக்கும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். பின்னர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை