#iranisraelwar #israelpalestineconflict ஈரானில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் இரண்டு வாரங்களை தாண்டிய நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகக் கொண்டாடப்படும் அல்-குத்ஸ் தினத்தை முன்னிட்டு, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஈரானில் 'அல்-குத்ஸ்' அதாவது ஜெருசலேம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்கிடையில், தெஹ்ரானில் நடந்த ஒரு 'அல்-குத்ஸ்' தினக் கூட்டம் அருகே வான்வழித் தாக்குதல் நடந்ததாகவும், அதில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.