உலகம்

"சீதா, அக்பர் சிங்கங்களின் பெயரை மாற்றுங்கள்.." - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மேற்கு வங்கத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், சிங்கத்திற்கு பெயர் வைப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? என்பது ஒவ்வொரு நபரின் எண்ண ஓட்டத்தை பொருத்தது என்று கூறியது. துர்கா பூஜையின்போது வாகனமான சிங்கத்தையும் மக்கள் வழிபடுகிறார்கள் என்றும், சிங்கத்திற்கு சீதா என்ற பெயரை வைத்ததால் தங்களுக்கு என்ன பிரச்சினை, இதனால் மத உணர்வு எப்படி புண்படும்? என்றும் வினவியது. விசாரணை முடிவில் இரு சிங்கங்களின் பெயரையும் மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு