கிழக்கு பசிபிக் கடலில் ஒரு தீவிரவாத அமைப்பால் இயக்கப்படும் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த கப்பல், போதைப்பொருளை கடத்தி செல்வதாக உளவுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், போதைப்பொருளை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலர் பீட் ஹெக்ஸெத் உத்தரவின்பேரில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.