உலகம்

Ukraine | Russian | War | உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! உருக்குலைந்த நிலையில் சடலங்கள் மீட்பு

தந்தி டிவி

உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான சுமியில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. குருத்தோலை ஞாயிறு தினத்தில் குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ரஷ்யாவின் இந்த தாக்குதலால் சாலைகளில் சடலங்கள் சிதறிக் கிடக்கும் நிலையில், உக்ரைன் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை