உலகம்

உடைந்த இதயங்களுக்கு இசையால் இதம் அளிக்கும் நபர் - "இந்த இசை, இந்த நொடியை ரசிக்க வைக்கிறது"

தந்தி டிவி

உக்ரைன் நாட்டில், போர் காரணமாக சோகத்துடன் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு, தனது இசையால், இசைக்கலைஞர் ஒருவர் இதம் அளிக்கிறார். ரஷ்யாவின் ஏவுகணைகள் கடந்த 19ம் தேதி தாக்கியதில், உக்ரைனின் ஒடெசா நகரம் பலத்த சேதம் அடைந்தது. இந்நிலையில், மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்துடனும், உடைமைகளை இழந்த சோகத்துடனும் ஏராளமானோர் உள்ளனர். இளைப்பாறுதலுக்காக கடற்கரைக்கு வரும் அவர்களுக்கு, தெரு இசை கலைஞர் ஒருவர், தனது இசையால் இதம் அளிக்கிறார். இந்த இசையானது எங்களை கடந்த கால சோகத்தில் இருந்தும், எதிர்காலத்தை பற்றிய பயத்திலிருந்தும் விடுவித்து, இந்த நொடியை ரசிக்க வைக்கிறது, என போரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை