India Pakistan War | Trump Speech | "இந்தியா பாக். போரில் பாக். பிரதமரே இறந்து போயிருப்பார்.." - சர்ச்சையை கிளப்பிய டிரம்ப் இந்தியா, பாகிஸ்தான் போரில் தாம் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான் போர் அணு ஆயுத போராக மாறிவிடாமல் தாம் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் கூறியுள்ளார். மேலும், இந்தப் போரில் தாம் தலையிடாவிட்டால், பாகிஸ்தான் பிரதமரின் உயிர் பறிபோயிருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், மூன்றரை கோடி பேர் இறந்து போயிருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறினார் என சொல்வதற்கு பதிலாக, பாகிஸ்தான் பிரதமரே இறந்து போயிருப்பார் என வாய் தவறி டிரம்ப் கூறியது சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது...