அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
புளோரிடா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஹமாஸ் அமைப்பினரை ஆயுதங்களைக் கைவிடச் செய்வது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். அப்போது, போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தை மிக விரைவில் எட்ட விரும்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.