மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க நடத்தப்பட்ட தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஈரான் ஒருபோதும் அணுஆயுதம் பெற முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது 'டிரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஈரான் எந்த காரணத்தை கொண்டும், எந்த வடிவத்திலும் அணுஆயுதத்தை பெற கூடாது என்பதே அமெரிக்காவின் முதல் மற்றும் முதன்மையான இலக்கு என்றும் அது என்றும் மாறாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.