உலகம்

அடுத்த இடியை இறக்கிய டிரம்ப் - ``விளைவுகள் மோசமாக இருக்க போகுது’’

தந்தி டிவி

மீண்டும் ரஷ்யாவை மிரட்டிய டிரம்ப்

தன்னுடனான சந்திப்பின்போது போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொள்ளாவிட்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தாம் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா உக்ரைன் போரே நடந்திருக்காது என்றும் இதற்கு காரணம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் என்றும் மீண்டும் கூறியுள்ள நிலையில்,

கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ஆறு போர்களை தாம் நிறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை ரஷ்ய அதிபர் புதினுடன் அலாஸ்காவில் நடைபெறும் பேச்சுவார்த்தை நன்றாக சென்றால்...

உடனே ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான இரண்டாவது சந்திப்பு நடைபெறும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தாம் விரும்பும் பதில் வரவில்லை என்றால் இரண்டாவது சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள டிரம்ப்,

தன்னுடனான சந்திப்பின்போது போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொள்ளாவிட்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்