அட்லாண்டாவில் டிரம்ப் அரசை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, ஜனநாயக கட்சி ஆளும் நகரங்களான நியூயார்க், சிகாகோவில் அரசு அதிகாரிகள் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அட்லாண்டாவில் ஆயிரக்கணக்கானோர் சாலையில் பேரணியாக சென்று எதிர்ப்பை பதிவு செய்தனர்.