உலகம்

இந்தியா, இலங்கை, மாலத்தீவு - முத்தரப்பு பேச்சுவார்த்தை

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகள் கொழும்புவில்​, தீவிர முத்தரப்பு கலந்தாலோசனையில் நடத்தின.

தந்தி டிவி

நாட்டின் பாதுகாப்பு, ஒருங்கிணைந்து செயல்படுதல், வளர்ச்சி ஆகியவை குறித்த கொழும்புவில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னே மற்றும் மாலத்தீவு பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியா திதி ஆகியோர் பங்கேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். நட்புறவு முறையில் பேசிய இந்திய மற்றும் இலங்கை தரப்பில், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை, புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான வழிகள் ஆகியவை குறித்து தீவிரமாக பேசப்பட்டன. அண்மையில், எம்டி நியூ டைமண்ட் எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிந்த விவகாரத்தில், இந்தியா வழங்கிய உதவிக்கு, இலங்கை நன்றி தெரிவித்தது. பின்னர், இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சவை சந்தித்த அஜித் தோவல் முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை