இந்தியாவுடனும், குறிப்பாக தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவே, தனக்கு இந்த மீன்வளத்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளதாக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தோடு இருக்கும் பிரச்சினையை தீர்த்து, இந்தியாவோடு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த தான் பிரதமரும், ஜனாதிபதியும் இந்த பதவியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.