பல்கேரியாவின் மேற்கில் உள்ள மலைப் பகுதியில், கடந்த ஒரு வாரத்தில் சிறுவன் உட்பட 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு தன்னார்வ அமைப்பை சேர்ந்த இவர்கள், திபெத்திய புத்த மதத்தை பின்பற்றியவர்கள் என்றும், அவர்கள் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 3 பேர் கொல்லப்பட்டு, அவர்கள் தங்கியிருந்த குடிசை எரிக்கப்பட்டது. மற்ற 3 பேர், ஒரு வேனில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.