அரச குடும்பத்தில் அடுத்தடுத்து இருவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது... ஏனெனில், பிரிட்டன் மன்னர் சார்லசிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் தெரிய வந்தது. இந்நிலையில் பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட்டிற்கு கடந்த ஜனவரியில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த போது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 வயதான கேட் கடந்த சில நாட்களாக பொதுவெளியில் தோன்றாதது அனைவரையும் சந்தேகம் கொள்ளச் செய்தது... பலரும் பலவிதமாக இணையத்தில் தகவல் பரப்பிய நிலையில் தற்போது அதற்கான உண்மைக்காரணம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கேட் விரைவில் நலமடைய உலகம் முழுவதும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன.