உலகம்

தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்பு

நேற்று வரை 8 பேர் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்று 5 பேர் மீட்கப்பட்டனர்

தந்தி டிவி

குகையில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்பு

தாய்லாந்து குகைக்குள் சிக்கி, கடந்த 16 நாட்களுக்கும் மேலாக உயிர் பிழைப்போமா என தவித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். கடந்த 2 நாட்களாக தலா 4 பேர் வீதம் மொத்தம் 8 பேர் மீட்கப்பட்டு இருந்தனர். உயிரை பணயம் வைத்து, மீட்பு குழுவினர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது. இதன்படி, குகைக்குள் சிக்கி, உயிருக்கு போராடிய 12 சிறுவர்களும், பயிற்சியாளர் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். கடைசியாக பயிற்சியாளரும் குகையை விட்டு வெளியே வந்தபோது, கூடியிருந்த உறவினர்களும் குடும்பத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுபோல சிக்கலான குகைக்குள் சிக்கிய, அனைவரையும் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது, வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"