உலகம்

நைஜர் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்.. 2 இந்தியர்கள் பலி

தந்தி டிவி

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் Niger நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் கடத்தப்பட்டார்.

நைஜரில் உள்ள டோசோ Dosso பகுதியில் கடந்த 15ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில், இரண்டு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாகவும்,

ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை தாய்நாட்டிற்கு கொண்டு வரவும், கடத்தப்பட்ட இந்தியரை பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்யவும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், நைஜரில் உள்ள அனைத்து இந்தியர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்