உலகம்

இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சே : தமிழர்கள் நலன் பற்றி விவாதிக்கப்படுவது நன்மைக்குரியது - இலங்கை தமிழ் அரசு கட்சி வலியுறுத்தல்

இலங்கை அதிபர் கோத்தயப ராஜபக்சே இந்தியா வரும் போது, இலங்கையில் உள்ள தமிழர்கள் நலன் பற்றி விவாதிக்கப்படுவது நன்மைக்குரியது என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் ஆப்ரஹாம் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கை அதிபர் கோத்தயப ராஜபக்சே இந்தியா வரும் போது, இலங்கையில் உள்ள தமிழர்கள் நலன் பற்றி விவாதிக்கப்படுவது நன்மைக்குரியது என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் ஆப்ரஹாம் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு , சம உரிமை வழங்குதல் தொடர்பாக இலங்கை அதிபருடன் விவாதிக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார், இந்நிலையில் இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஆப்ரஹாம் சுமந்திரன், இதற்கு தமிழர்கள் எவ்வித கருத்து வேறுபாடு இன்றி, மத்திய அரசுடன் இணைந்து இலங்கை தமிழர்களின் நன்மைக்காக செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு