உலகம்

2 போலீஸ் அதிகாரிகள் கொலையில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவுக்கு தொடர்பு : நாடாளுமன்றத்தில் எம்.பி கருத்தால் பரபரப்பு

இலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு தொடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி
இலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு தொடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார். அமைச்சர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தின் மீது, நாடாளுமன்றத்தில் பேசிய அவர், அண்மையில், கருணா அம்மான் தனது சமூக வலைதள பக்கத்தில், '2004ம் ஆண்டுக்கு முந்தைய கருணா யார் என கேட்டுப் பாருங்கள்' என அச்சுறுத்தல் விடுக்கும் வகைளில் பதிவிட்டிருந்ததை சுட்டிக் காட்டினார். அந்த மிரட்டலை தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் கொலை நடந்துள்ளதாகவும், இது குறித்து அதிபர் சிறிசேனா விசாரிக்க வேண்டும் எனவும் நளின் பண்டார, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி