உலகம்

இலங்கையில் நீரில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

தந்தி டிவி

அம்பாறை மாவட்டம் காரைதீவு மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் வாகனம் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்... நிந்தவூரில் இருந்து சம்மாந்துரை நோக்கி பயணித்த வாகனம் மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் நீரில் மூழ்கி 6 மாணவர்களும், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கனமழை வெள்ளத்தால் 23 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 99 ஆயிரத்து 876 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 35 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் 2 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது... பாதிக்கப்பட்ட 89 ஆயிரத்து 7 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி

BREAKING || கூட்டணிக்குள் விஜய்? நம்பிக்கையோடு டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை

CSK | IPL 2026 | IPL Fever ON.. இன்று... முதல் போட்டியில் CSK?

BREAKING || மதுரை அருகே யாரும் எதிர்பாரா அதிர்ச்சி சம்பவம்... 2 பேர் உயிரிழப்பு

🔴LIVE : சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது