உலகம்

இலங்கையில் நீரில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

தந்தி டிவி

அம்பாறை மாவட்டம் காரைதீவு மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் வாகனம் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்... நிந்தவூரில் இருந்து சம்மாந்துரை நோக்கி பயணித்த வாகனம் மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் நீரில் மூழ்கி 6 மாணவர்களும், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கனமழை வெள்ளத்தால் 23 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 99 ஆயிரத்து 876 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 35 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் 2 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது... பாதிக்கப்பட்ட 89 ஆயிரத்து 7 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு