உலகம்

இலங்கை அதிபர் தேர்தல் : விறுவிறு வாக்குப்பதிவு

உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் அதிபர் தேர்தலில், விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

தந்தி டிவி
உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் அதிபர் தேர்தலில், விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்திய நேரப்படி, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. இலங்கை பொது ஜன பெரமுனா வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே NUGEGODA என்ற இடத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோல, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, WEERAWILA என்ற இடத்தில் ஓட்டு போட்டார். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதனிடையே, வட கிழக்கு மாகாணத்தில் வாக்காளர்கள் சென்ற வேன் மீது, மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். சிறு சிறு அசம்பாவித சம்பவங்கள் தவிர வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்