உலகம்

இலங்கை அதிபர் தேர்தல் : விறுவிறு வாக்குப்பதிவு

உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் அதிபர் தேர்தலில், விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

தந்தி டிவி
உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் அதிபர் தேர்தலில், விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்திய நேரப்படி, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. இலங்கை பொது ஜன பெரமுனா வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே NUGEGODA என்ற இடத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோல, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, WEERAWILA என்ற இடத்தில் ஓட்டு போட்டார். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதனிடையே, வட கிழக்கு மாகாணத்தில் வாக்காளர்கள் சென்ற வேன் மீது, மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். சிறு சிறு அசம்பாவித சம்பவங்கள் தவிர வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை