உலகம்

இஸ்லாமியர்களை எனக்கு எதிராக திருப்பினார் ரணில் - ராஜபக்ச குற்றச்சாட்டு

வரும் 16ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுவதையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

தந்தி டிவி

இலங்கை மத்திய மாகாணத்தில் பிரபல புத்த பிட்சுக்கள் மற்றும் இஸ்லாமிய குருமார்களை இணைத்து, உருவாக்கப்பட்டுள்ள 'பெருவாழ்க்கை' அமைப்பு சார்பில், கண்டியில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராஜபச்சே, தமது ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கலவரத்தை பற்றி பேசுகிற, ஐக்கிய தேசியக் கட்சியினர், அண்மையில் நடைபெற்ற கிந்தோட்டை, அம்பாறையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி வாய்திறக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஈஸ்டர் தின தீவிரவாத தாக்குதலில் இஸ்லாமியர்களே அதிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத ஒருவருக்கு, நாட்டின் தலைமைப்பதவி எதற்கு என்றும், சாடியுள்ளார். இஸ்லாமியர்களை தமக்கு எதிராக திசை திருப்பியது, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி தான் என, ராஜபக்சே குற்றம் சாட்டி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை