உலகம்

"ஈஸ்டர் தாக்குதல் : உயர் மட்ட விசாரணைக்குழு" - இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவு

இலங்கை தலைநகர் கொழும்புவில், ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின்போது, 250 பேர் உயிரை பறித்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு சிறப்பு குழுவை அமைத்து, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார்.

தந்தி டிவி

இலங்கை தலைநகர் கொழும்புவில், ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின்போது, 250 பேர் உயிரை பறித்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு சிறப்பு குழுவை அமைத்து, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார்.இந்த சிறப்பு குழுவில், மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எதிர் காலத்தில் இதுபோன்ற தாக்குதல் நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு இந்த குழு, பரிந்துரை செய்யும். இந்த சிறப்புக்குழு, இன்னும் 6 மாதத்திற்குள் இலங்கை அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று மைத்ரிபால சிறி சேனா தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்