உலகம்

"இலங்கை அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு" - அதிபர் சிறிசேனா கூறியதாக சபாநாயகர் தகவல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிபர் சிறிசேனா கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கை அதிபர் சிறிசேனாவை அவரது அலுவலகத்தில், சபாநாயகர் கரு ஜயசூரிய சந்தித்தார். அப்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சிறிசேனா கூறியதாக சபாநாயகர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை உறுதியற்ற நிலையை எதிர் கொண்டுள்ளதாகவும், தொழில் முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிபர் சிறிசேனாவிடம் சபாநாயகர் வலியுறுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கை அதிபர் சிறிசேனா இன்று ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்