உலகம்

"இலங்கை அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு" - அதிபர் சிறிசேனா கூறியதாக சபாநாயகர் தகவல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிபர் சிறிசேனா கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கை அதிபர் சிறிசேனாவை அவரது அலுவலகத்தில், சபாநாயகர் கரு ஜயசூரிய சந்தித்தார். அப்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சிறிசேனா கூறியதாக சபாநாயகர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை உறுதியற்ற நிலையை எதிர் கொண்டுள்ளதாகவும், தொழில் முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிபர் சிறிசேனாவிடம் சபாநாயகர் வலியுறுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கை அதிபர் சிறிசேனா இன்று ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை