உலகம்

ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக ஜனாதிபதி வலியுறுத்தினார் - காவல்துறை தலைவர் பூஜித்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியதாக போலீஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கையில், ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியதாக போலீஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற சிறப்பு குழுவின் மூன்றாவது அமர்வு முன், காவல்துறை தலைவர் பூஜித் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தன்னை அழைத்து, காவல்துறை தலைவர் என்ற வகையில் தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வலியுறுத்தியதாக கூறியுள்ளார். அதன் பின்னர் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டதாகவும், பதவி விலகினால் இலங்கை அரசாங்கத்தில் தூதர் பதவி உள்ளிட்ட உயர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்ததாக சாட்சியத்தில் பூஜித் கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்