உலகம்

2020-ஆம் ஆண்டிலும் சுதந்திர கட்சியே ஆட்சியமைக்கும் : இலங்கை அதிபர் சிறிசேன நம்பிக்கை

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி 2020-ம் ஆண்டில் இலங்கையில் புதிய அரசாங்கத்தை அமைக்க போவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி 2020-ம் ஆண்டில் இலங்கையில் புதிய அரசாங்கத்தை அமைக்க போவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68-வது ஆண்டு நிறைவு விழா கொழும்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், அனைவரும் அதிபர் தேர்தல் குறித்தே பேசுவதாகவும், ஆனால் 2020-ஆம் ஆண்டில் நாட்டை பிரதமர் தான் பொறுப்பார் எனவும் கூறினார். எனவே பிரதமரை நியமிப்பதில் சுதந்திரா கட்சி தனிக்கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டிலும் சுதந்திரக் கட்சியே ஆட்சியமைக்கும் என சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை