இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, கொழும்பில் உள்ள அவரது அலுவலகம் முன், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தை பெறமுடியாத பெண்களை இழிவுபடுத்தும் வகையில், ராஜபக்ச வெளியிட்ட கருத்தை கண்டிப்பதாக பதாதைகள் ஏந்திய பெண்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். தங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் பிரதமர் அலுவலகத்தில் அவர்கள் அளித்தனர்