உலகம்

ராஜபக்சேவுக்கு ஆதரவு தருமாறு நெருக்கடி - முல்லைத் தீவு எம்.பி. சாந்தி குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்களுக்கு கோடி, கோடியாக பணம் மற்றும் அமைச்சர் பதவிகளை தருவதாக கூறி நெருக்கடி அளிக்கப்படுவதாக முல்லைத் தீவு எம்.பி. சாந்தி குற்றச்சாட்டு.

தந்தி டிவி

ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்தால், பல்வேறு சலுகைகளை அள்ளித் தருவதாக கூறி, எம்பி.க்களை விலை பேசுவதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளார். முல்லைத் தீவு அருகே ஓதியமலை கிராமத்தில், இலங்கை ராணுவத்தால் 32 பேர் கொல்லப்பட்டதன் 32ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில், முல்லைத்தீவு எம்பி சாந்தி சிறிஸ்கந்தராசா பங்கேற்று நினைவு ஸ்தூபிகளை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சாந்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்களுக்கு கோடி, கோடியாக பணம் மற்றும் அமைச்சர் பதவிகளை தருவதாக கூறி நெருக்கடி அளிக்கப்படுவதாக கூறினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்