உலகம்

ராஜபக்சேவுக்கு ஆதரவு தருமாறு நெருக்கடி - முல்லைத் தீவு எம்.பி. சாந்தி குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்களுக்கு கோடி, கோடியாக பணம் மற்றும் அமைச்சர் பதவிகளை தருவதாக கூறி நெருக்கடி அளிக்கப்படுவதாக முல்லைத் தீவு எம்.பி. சாந்தி குற்றச்சாட்டு.

தந்தி டிவி

ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்தால், பல்வேறு சலுகைகளை அள்ளித் தருவதாக கூறி, எம்பி.க்களை விலை பேசுவதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளார். முல்லைத் தீவு அருகே ஓதியமலை கிராமத்தில், இலங்கை ராணுவத்தால் 32 பேர் கொல்லப்பட்டதன் 32ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில், முல்லைத்தீவு எம்பி சாந்தி சிறிஸ்கந்தராசா பங்கேற்று நினைவு ஸ்தூபிகளை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சாந்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்களுக்கு கோடி, கோடியாக பணம் மற்றும் அமைச்சர் பதவிகளை தருவதாக கூறி நெருக்கடி அளிக்கப்படுவதாக கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்