இலங்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இருந்து கடந்த 7ஆம் தேதி இலங்கை வந்த 56 வயது பெண் மற்றும் 17 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் 107 பேர் மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாளை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.