உலகம்

இயற்கைக்கு இரையான அமெரிக்கா.. நொறுங்கிய 6 கோடி பேர்.. வரும் நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகும்

தந்தி டிவி
• அமெரிக்காவை, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்புயல் புரட்டிப்போட்டுள்ளது. சுமார் 6 கோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் குளிர் நிலவுவது வழக்கம் தான். ஆனால் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் வீசிவரும் கடுமையான பனிப்புயல் அந்நாட்டையே முடக்கிப்போட்டுள்ளது. • ஆர்க்டிக் பகுதியைச் சுற்றிவரும் குளிர்ந்த காற்றே, நிலைமை இவ்வளவு மோசமடைய காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். • பல மாகாணங்களில் சுமார் 15 முதல் 30 செண்டி மீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளதால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கிபோய் உள்ளது. • நூற்றுக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதால், பொதுமக்கள் முடிந்தளவு பயணங்களை தவிர்க்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான விமானங்களும் ரத்தானதால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். • கென்டக்கி(Kentucky), விர்ஜீனியா(virginia), கான்சஸ்(Kansas) உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 30 மாகாணங்களில் நிலைஅமை மோசமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. • அடுத்த ஒரு வாரத்திற்கு பனிப்புயலின் தாக்கம் நீடிக்கக்கூடும் என்பதால், கடும் குளிரோடு, மின்தடை மற்றும் இயற்கை எரிவாயு தடுப்பாட்டையும் அமெரிக்கர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்