உலகம்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த `சிலி' Ex-அதிபர்.. தற்போதைய அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

சிலி நாட்டின் முன்னாள் அதிபர் செபஸ்டியன் பினெரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். 74 வயதான செபஸ்டியன் பினெரா, இரண்டு முறை சிலி நாட்டின் அதிபராக இருந்துள்ளார். இவர், தெற்கு சிலியில் உள்ள லாகோ ராங்கோ நகர் பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி ஏரியில் விழுந்த‌து. மீட்புப் படையினர் விரைந்து செல்வதற்குள், செபஸ்டியன் பினெரா உயிரிழந்துள்ளார். அதே நேரத்தில், அவருடன் பயணித்த 3 பேர் உயிர் பிழைத்துள்ளனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் கேப்ரியல் போரிக், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ