உலகம்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த `சிலி' Ex-அதிபர்.. தற்போதைய அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

சிலி நாட்டின் முன்னாள் அதிபர் செபஸ்டியன் பினெரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். 74 வயதான செபஸ்டியன் பினெரா, இரண்டு முறை சிலி நாட்டின் அதிபராக இருந்துள்ளார். இவர், தெற்கு சிலியில் உள்ள லாகோ ராங்கோ நகர் பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி ஏரியில் விழுந்த‌து. மீட்புப் படையினர் விரைந்து செல்வதற்குள், செபஸ்டியன் பினெரா உயிரிழந்துள்ளார். அதே நேரத்தில், அவருடன் பயணித்த 3 பேர் உயிர் பிழைத்துள்ளனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் கேப்ரியல் போரிக், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை