மகிந்த ராஜபக்ச உடன் ஷ்ரிங்லா சந்திப்பு - இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை
அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கொழும்பில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இலங்கையில் இந்தியா செயல்படுத்தி வரும் திட்டங்கள், சுற்றுலாத்துறை, கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.