உலகம் முழுவதும் சென்று யாசகம் கேட்பது அவமானமாக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் வேதனை
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள, முப்படைத் தளபதி அசிம் முனீருடன் உலகம் முழுவதும் சென்று யாசகம் கேட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் செரீப் வேதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், முன்னணி ஏற்றுமதியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஷெபாஷ் செரீப், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிச் சூழல் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது, நிதியுதவி கேட்டு முப்படைத் தளபதி அசீம் முனீருடன் உலக நாடுகளுக்குச் சென்று கடன் கேட்ட சம்பவத்தை அவர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். நாட்டை நிர்வகிக்க தொடர்ந்து கடன் வாங்க வேண்டியுள்ளதை நினைத்து அவமானத்தால் வெட்கித் தலைகுனிவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.