பெரு நாட்டில், முதுகெலும்புடன் ஒட்டிப் பிறந்த சுமார் இரண்டரை மாதங்களே ஆன, இரட்டை பெண் குழந்தைகள், அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.
இரட்டை குழந்தைகளின் பெற்றோர்களான மெனெலியோ Menelio, மார்லெனிக்கு Marleni கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி குறைப்பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் ஒட்டிப்பிறந்ததால் பெற்றோர் சோகமடைந்தனர்.
இந்நிலையில், பெரு தலைநகர் லிமாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளை, அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரித்தனர். இதனால் குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.