ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் நகரில் கடந்த வாரம் 34 பேர் பலி
கடந்த வாரம் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில், மேற்கு உக்ரைனின் டெர்னோபில் நகரத்தில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது 2025ஆம் ஆண்டில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய ரஷ்ய ஏவுகணை தாக்குதல் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தாக்குதலுக்குள்ளான குடியிருப்பு பகுதிகளின் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.