ரஷ்யாவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரஷ்யாவின் கோச்செடோவ்கா-2 Kochetovka-2 ரயில் நிலையம் அருகே, எரிபொருள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் திடீரென தீப்பற்றி அடுத்தடுத்த பெட்டிகளுக்கு வேகமாகப் பரவி தடம்புரண்டது. இதையடுத்து வானுயர கரும்புகை வெளியேறியது. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்த நிலையில், விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.