இந்தியா பாகிஸ்தான் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்கு சென்று பார்வையிட்ட அவர் இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடிய போது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். சமாதானத்திற்காக இந்தியாவுடன் பேச தயாராக இருப்பதாகவும், சமாதானத்திற்கான நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்சினையும் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்... ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுடன் பயங்கரவாதத்தை தவிர வேறு எது குறித்தும் பேச்சுவார்த்தை இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.