உலகம்

விடுதலை புலிகளின் இறுதிக்கட்ட போரில் காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் - கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது, காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் என்று அதிபர் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அதில், ஒரு லட்சம் பேர் பலியானதாக கருதப்படுகிறது. சுமார் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச, அப்போது இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தார். இந்நிலையில், இலங்கைக்கு வந்துள்ள ஐ.நா. உயர் அதிகாரி ஹனாஸ் சிங்கரிடம், கோட்டபய, இறுதிக்கட்ட போரின் போது

காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக, அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

தேவையான விசாரணை முடிந்த பிறகு, காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழ் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கையை தொடர தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை