உலகம்

"தேர்தல் தள்ளி வைப்பு"...வன்முறையாய் வெடித்த போராட்டம் - வீசப்பட்ட புகை குண்டுகள் - பரபரப்பு காட்சி

தந்தி டிவி

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் அதிபர் தேர்தலை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக, கடந்த சனிக்கிழமை அதிபர் மேக்கி சால் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டாக்கரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், சாலைகளில் டயர்களை தீயிட்டு எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டம் வன்முறையாக மாறியதால், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். இதனிடையே, போராட்டங்கள் குறித்து சிறப்பு செய்திகள் நேரலைகள் ஒலிபரப்ப‌க்கூடாது என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அதே நேரத்தில், வன்முறையை தூண்டியதாக சில ஊடகங்களின் செயல்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்