பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என பழ. நெடுமாறன் மீண்டும் உறுதி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பிரபாகரன் உயிருடன் இருப்பதை 2009 முதலே நான் கூறி வருகிறேன்; சர்வதேச சூழ்நிலை சாதகமாக அமையும் போது அவர் நிச்சயம் வெளியே வருவார்' எனத் தெரிவித்துள்ளார்.