உலகம்

3 டோஸ் தடுப்பூசியை 2 - ஆக குறைக்க திட்டம்- இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்?

3 டோஸ் தடுப்பூசியை 2 - ஆக குறைக்க திட்டம்- இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்?

தந்தி டிவி

3 டோஸ் தடுப்பூசியை 2 - ஆக குறைக்க திட்டம்- இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்?

மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஜைடஸ் நிறுவனம் மூன்று டோஸ் தடுப்பு ஊசியை இரண்டாக குறைக்க திட்டமிட்டுள்ளது.ஜைடஸ் கெடில்லா நிறுவனத்தின் ஊசியில்லா கொரோனா தடுப்பூசியான ஜைகோவ்-டி மருந்து அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவி்ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 3 டேஸ் தடுப்பூசி வாங்குவதற்கான விலை அதிகமாக இருப்பதால் ஜைடஸ் நிறுவனம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளது. முதலில் மூன்று தடுப்பூசியில் தலா 2 மில்லி கிராம் என்ற அளவில் 6 மில்லி கிராம் செலுத்த பரிந்துரைக்கபட்டிருந்தது. தற்போது அந்த நிறுவனம் ஒரே தடுப்பூசியில் 3 மில்லிகிராம் செலுத்தி மொத்தம் இரண்டு டோஸ் சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்