உலகம்

3 டோஸ் தடுப்பூசியை 2 - ஆக குறைக்க திட்டம்- இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்?

3 டோஸ் தடுப்பூசியை 2 - ஆக குறைக்க திட்டம்- இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்?

தந்தி டிவி

3 டோஸ் தடுப்பூசியை 2 - ஆக குறைக்க திட்டம்- இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்?

மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஜைடஸ் நிறுவனம் மூன்று டோஸ் தடுப்பு ஊசியை இரண்டாக குறைக்க திட்டமிட்டுள்ளது.ஜைடஸ் கெடில்லா நிறுவனத்தின் ஊசியில்லா கொரோனா தடுப்பூசியான ஜைகோவ்-டி மருந்து அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவி்ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 3 டேஸ் தடுப்பூசி வாங்குவதற்கான விலை அதிகமாக இருப்பதால் ஜைடஸ் நிறுவனம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளது. முதலில் மூன்று தடுப்பூசியில் தலா 2 மில்லி கிராம் என்ற அளவில் 6 மில்லி கிராம் செலுத்த பரிந்துரைக்கபட்டிருந்தது. தற்போது அந்த நிறுவனம் ஒரே தடுப்பூசியில் 3 மில்லிகிராம் செலுத்தி மொத்தம் இரண்டு டோஸ் சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு