பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில், ஆண்டுதோறும் நடைபெறும் வளர்ப்பு நாய்களுக்கான ஓட்ட பந்தயம் இன்று அதிகாலை நடைபெற்றது.இதில் தங்கள் செல்ல பிராணிகளுடன் களமிறங்கிய அவற்றின் உரிமையாளர்கள் குதுகலமாக வீதிகளில் வலம் வந்தனர். நாய்களுடன் அதன் உரிமையாளர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு ஓடி, பரிசை தட்டிச் சென்றனர். இதில் கலந்து கொள்ள தனி ஒரு நபருக்கு ஆயிரத்து 700 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இந்த தொகையில் ஒரு பங்கு செல்ல பிராணிகளின் முகாம்களை பராமரிக்க கொடுக்கப்படுகிறது.