மூடப்பட்ட உயிர்நாடியால் எகிறிய எரிபொருள் விலை - யோசித்து மக்கள் போகும் மாற்றுவழி
பெட்ரோல் விலை உயர்வு-மின்சார வாகனங்களுக்கு மாறும் தாய்லாந்து மக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் தாய்லாந்தில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் அதிகளவில் மின்சார வாகனங்களை நாடத் தொடங்கியுள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து பாதிப்பால், தாய்லாந்தில் டீசல் விலை 59 சதவீதமும், பெட்ரோல் விலை 34 சதவீதமும் உயர்ந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த பாங்காக் சர்வதேச மோட்டார் கண்காட்சியில், முன்பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 80 சதவீதம் மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்களாகும். குறைந்த செலவு காரணமாக சீன நிறுவனங்களின் மின்சார வாகனங்களை வாங்க தாய்லாந்து மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.