பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் சித்திரவதை அல்லது பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற, இழிவான தண்டனைக்கு உள்ளாக்கப்படலாம் என ஐநா நிபுணர் எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு இம்ரானின் சிறைவாசமும் ஒரு காரணமாக உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா. நிபுணர் ஆலிஸ், இம்ரானின் சிறை தண்டனை சர்வதேச மனித உரிமை தரநிலைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.