உலகம்

பாகிஸ்தான் தேர்தலில் புதிய திருப்பமாக பிரதமர் ஆகிறார் இம்ரான்கான்...

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமராகும் வாய்ப்புள்ள இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதனால் இம்ராம்கான் பாகிஸ்தானின் புதிய பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க விரும்புவதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மக்கள் நீண்ட நாட்களாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள இம்ரான் கான் இந்தியாவுடன் நட்புறவை எப்போதும் பாகிஸ்தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் வரிசீர்திருத்தம் மற்றும் அரசு செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் விரும்புவதாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"