Pakistan | Asim Munir | ரத்த வேட்டையில் இறங்கிய பாக்., ராணுவம்.. `ஹை அலர்ட்..' பதற்றத்தில் பாகிஸ்தான் #Pakistan #AsimMunir #ShehbazSharif #Army பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நடந்த கொடூர தாக்குதல்களுக்குப் பிறகு, பிரிவினைவாத ஆயுதக்குழுக்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். ஜனவரி 31 அன்று தடைசெய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவம் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, நடந்த ராணுவ நடவடிக்கைகளில் 197 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசியல் தீர்வு இல்லையெனில் வன்முறை மேலும் தீவிரமடையும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.