Nirav Modi Case | மீண்டும் இந்தியாவுக்கு வரும் நீரவ் மோடி? இந்தியாவிற்கு நாடு கடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீண்டும் ஆய்வு செய்யக் கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனுவை, லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ அதிகாரிகள் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் தீவிர வாதங்களை ஏற்ற நீதிமன்றம், இந்த வழக்கை மறுஆய்வு செய்வதற்கான எந்தவொரு விதிவிலக்கான சூழலும் இல்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் நீரவ் மோடியை அழைத்து வருவதற்கான சட்டப் போராட்டங்களில் இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.