கொரோனா தொற்று காரணமாக எவரஸ்ட் சிகரம் உட்பட இமய மலை சிகரங்களை நேபாள அரசு மூடுகிறது. மலை ஏறுவதற்கான சீசன் தொடங்கி உள்ள நிலையில், கொரோனா பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.